இறைவன் படைப்பிலே!வந்த மாற்றமோ!இடையில் வந்த விழி ரசாயனத்தால்வந்ததோ!
கடும் தவம் தான்பூண்டிருந்தனர்- ஏனையகளைத்தனர்....
ஆனை பசியோ!
அடக்க முடியாததால்தேகத்தில் உணவிட்டு
உண்ணுகின்றனர்.....
எந்த முனிவனும் செய்யாத ஒரு மர்ம முடிச்சை
அவிழ்க்க முனையும் ஒரு அதிசய முனிவனாக வலம் வருகின்றனர்
சாலைத்தெருக்களில்.......
விழியை கழுவி யானைப்பசியை அடக்க பல மணிமேகலைகள் தெருக்களில்
சுயம்வரம் அடுப்புக்குள் தலையை
புதைத்துக்கொண்டுதான்
விறகு எரிக்க முனைகின்றனர்....
எதுவும் புரியாத பெற்றோரின்
மனதில் கிளிசரினை தடவி விட்டு
வாடிக்கையாக தான் தொடருகிறது...
மணி தெரியாமல்
திசைகாட்டும் கடிகாரங்கள்
அல்ல கலங்கரை விளக்குகளாய்
தன் முந்திக்கு படகுகளை வழியனுப்பும் ஓடம்....
நினைத்தால் நிலமை சரியாகிடும் என
நினைக்கும் அண்ணனுக்கு
நிம்மதை கெடுத்து பூபாள ராகத்தில் ஒரு
சோக வேதாந்தமாக அவளின் வாழ்க்கை
பிறருக்கு,....
கிட்டாத அட்சயப் பாத்திரத்துக்கு
அலை பாயும் பல மணிமேகலைகள்
என் கண்ணில்
நிறைகின்றன... தினமும்
பல புனையா ஓவியமாக முச்சந்தியில்...
கவிஞர் கோபிநாத்ராஜா
இராமநாதபுரம் -9894887705
பல மணிமேகலை.....
எனக்கு முன்னால்
எனக்கு பின்னால்
என்னவாகி இருந்தேன் நான்?
அறியத் துடிக்கிறது தான்
மனசு !
பிரமாண்ட வெளியுள் நுழைந்து
துழாவி
ஊடுறுவிய முன்னும் பின்னும்
அகப்படாமல்
அவஸ்தையுடன் வெளியேறியது
ஞானம்॥!
எனக்கு பின்னால்
என்னவாகி இருந்தால் என்ன?
எனக்கு முன்னால்
என்னைத் துளைக்கும் பசிக்கு
எனக்கு சொல்வேன்
இப்போது....?
கா.அமீர்ஜான்-திருநின்றவூர்
புறத்தின் வினா?
இனி
விரியப்போவதில்லை
தாமரை இதழ்கள்...
விரிவடையப் போகிறது
புறநகர்கள்...
சுரண்டும்
சூழ்ச்சிகளைச் சுமக்கும் எடுபிடிகளை
கைக் குலுக்கி வரவேற்பதில்
உதிர்ந்துபோகும் இலைகள்
என்பதில்.....
வலிய
விரிவடையும் முயலும் இருளை
முடக்குவதாகச் சொல்லும்
சூரியனும்
ந்ம்பகத்தன்மை இழந்ததில்
வருந்த வேண்டியிருக்கிறது
நம்பிக்கெட்ட மனம்....
அடிவானச் சிவப்பையும்
கீழ்வானச்சிவப்பையும் குழைத்து
யாருக்குமான விடியலுக்கும்
புறப்படத் தொடருகையில்
நாற்காலிகளுக்காக எதன்முன்னும்
நெளிய விடுகிறது
புன்முறுவல்....
சம்பவங்கள் முன்
இப்போது
நாம் என்பது
யாரெனத் தெளிந்துக் கொள்ள
விழைகிறது
அகத்தில் தோன்றும் புறத்தின் வினா?
கா।அமீர்ஜான்-திருநின்றவூர்
ரங்கோலி......
காஷ்மீரத்து கம்பளமோ?
சாலையில் தொப்பி வைத்த முல்லை மோட்டோ?
காலையில் பூத்த மல்லிகையோ?
ந்ந்தவனத்தில் மலர்ந்த பூங்கொத்துக்களோ?
சின்ன சித்திரமோ?
சிங்கார ஓவியமோ?
ஆழ்கடலின் நல்முத்தோ?
பளபளக்கும் பவளப்பாறையோ?
கோலம் வரைந்த கோதையோ?
கோலத்தில் தெரிவது உன் கைத்திறமையோ?
கற்பனையின் உயிர்துடிப்பா?
கலைத்தாயின் காவியமோ புத்தாண்டிற்கு
பெ.மகேஷ்வரி
மதுரை-9894597989
மீனவர்கள் மனக்குமுறல்....
மீனவர்கள் மனக்குமுறல்....
நாகை மீனவர்கள் நடுகடலில் மீன்பிடிக்க
யாரும் தடை போடல் ஆகாது-ஆகையினால்
சிங்களத்து ராணுவமும் தீங்கிழைத்தால் நாமெதிர்ப்போம்
பொங்கும் கடலதனைப் போல்...!
கச்சத்தீவதனை கண்ணியமாய் சிங்களர்களுக்குப்
பிச்சைக் கொடுத்த்துதான் பெரும் பிழையோ-அச்சமின்றி
மீன்பிடிக்கத் தடைவிதித்தால் மீண்டுமத் தீவினையே
நாம் பிடிப்போம் பொய்யில்லை நம்பு...!
புலிப்படையைப்போல் நாங்கள் போர்க்கருவி தூக்கிடவோ!
சலிப்படையோம் துரோகிகளை சாகடிப்போம்- எலிப்புழையாய்
பானைக்குல் இருந்து பயங்காட்டும் சிங்களரே!
யானைக்கு முன் எதிர்ப்போர் யார்...!
அமைதி வேண்டும்.....
அமைதி நிலவ வேண்டும்-ஈழம்
அன்பில் மகிழ வேண்டும்
இமைகள் மூடப்பயந்த-தமிழர்கள்
இனிதே உறங்க வேண்டும்
குண்டு சத்தம் ஓய்ந்து-நாட்டில்
குருவி பறக்க வேண்டும்
நண்டுபோல் வளைக்குள்-பதுங்கும்
நடுக்கம் மறைய வேண்டும்।
ஜப்பான் நாட்டில் வீழ்ந்த –குண்டில்
நான்கு மடங்கும் மேலாய்
யாழ்ப்பான நாட்டில் வீழ்ந்தால்-மக்கள்
நிலமை என்ன சொல்வேன்
புலியும் அரசும் கோடிப் பேசி
போரை நிறுத்த வேண்டும்
வலியும் ரணமும் நீங்கி –மக்கள்
வாழ்வு திரும்ப வேண்டும்।
குடந்தை பரிபூரணன்-கும்பகோணம்0435-2471100
நிம்மதியான நித்திலம் காண்பது எப்போது....
கழுபிணியும் தயமைத்தனமும்
அழுகுரலும் அவலநிலையும் மறைந்து
ஈழத்தமிழர் இனிய வாழ்வில்
ஈடில்லா மகிழ்ச்சி மலர்வது எப்போது
சுதந்திர மூச்சை சுவாசன் செய்ய
இயந்திரமாஇப் போராடிய
தூயத்தலைவரின் இதயத்தாசை
துடிப்புடன் நிறைவேறியது -இன்றோ
யிரம் கேள்விகள் அம்பாய் துளைக்க
அடுத்தது என்ன? நடக்குமோவென
அச்சமுறும் துச்ச நிலை;
நிலையான நிம்மதிக்காக
நித்தமும் நிலைகுலையும்
நிலையில் -தேவையில்லாமல்
தொலைக்காட்சித் தொடரில் வாழ்வைத்
தொலைக்காமல்......
தொகைக்காக -பகை உணர்வுமிக்க வெளிநாடு செல்லாமல்
தகைமைசால் உணர்வோடும்
தளராத நெஞ்சத்துறுதியோடும்
துளிர்விடும் போதே தளிர்களின் மனதில்
தொண்டுள்ளத்தை வளர்க்க வேண்டும்....
பணம் சம்பாதிக்க பாதகச் செயல்களுடன்
பிணம் தின்னிக் கழுகுகளாய்
மக்களாஇ பிடிங்கி த்தின்னும் பிசாசுகள் ஒருபுற்ம்
ஒடுங்கியே போனது ஒழுக்க நிம்மதியும்
ஒரு கணம் உலக நிலை நினைத்தால்
பூரணமான புது உலகினை
வரும் புத்தாண்டில்லாவது பூரிப்புடன்
நாம் காண்போமா?
கவிதாயினிகலைத்தாமரை-மதுரை
சூரியத்துகள்...
நாட்கள் நகரும்போது
கால்கள் துவண்டாலும்
இலக்கை அடையும் வரை!...
இருட்டாய் இருந்தாலும்
வெளிச்சம் நோக்கி!
குளிராய் இருந்தாலும்
வெப்பம் நோக்கி!
சூரியனை நோக்கி
செல்லும் பயனத்தில்
விட்டிலாகி
வீழ்ந்துடுவேன் என்றாலும்
எரிந்து போனாலும்
சேர்ந்திடுவேன்
ஒரு சூரியத்துகளாய்....
கவிஞர்அருணாச்சலசிவா
சென்னை-9884398283
என்ன செய்யப் போகிறாய்?
ஏழுகடல் தாண்டி
இருண்ட குகைக்குள்
இருந்த பேழையினுள்
ஒளித்து வைத்த
என் உயிர் எப்படி
சிக்கியது?
உருட்டி விளையாட
உன் கைகளில்
கொடுத்தற்கான அடையாளங்கள்
என்னிடம்
ஏதுமில்லை...
வாங்கியதற்கான
அடையாளங்களை
என்ன செய்யப் போகிறாய்?
கவிஞர்யாழி
9976350636
காதல் கவிதை.....
மின்னோட்டம்
உன்னைச் சந்திக்கும்
ஒவ்வொரு முறையும்....
எதுவுமே
ஈடாவதில்லை
உன் ஓரப்பார்வைக்கு....
எனக்கு
என்னிடம் பிடித்தது
உன்னை எழுதுவது
மனம் முழுவதும்
மலர்களின் நறுமணம்
காதல் நினைவுகள்
என்ன புண்ணியம் செய்ததோ!
கடற்கரை மணல்
உன் பாதங்களை சுமப்பதற்கு....
கவிஞர்.கிருஷ்ணமூர்த்தி
செலம்-9942666936
உள்ளங்கைக்குள் உலகம்
உன் எதிர்காலத்தை கேட்பதை கைவிடு
அதன் வாழ்க்கையே நெல்லுக்கு
சிறைப்பட்டுக் கிடக்கிறது...
கிழக்கே வெளுக்கும் முன்னே!
நீ விழித்தெழ உன்
கண் ஒளிட்டே!
இந்த உலகம் விடியட்டும்
ஆறுவழிப்பாதையில் முதல் பாதை
நடைபாதை அதில் நம்பிக்கை நடைபோடு
வான்வழிப்பதையில்
உலகை வலம் வரலாம்....
உன் வருகைக்கு காத்திருக்கிறது
நட்சத்திரக்கூட்டம்.....
நீ எப்படி பிடித்தாலும்
மேல் நோக்கியே எறியும் நெருப்பு
இறக்கும் தருவாயில் கூட
நிமிர்ந்தே நிற்கும் தீ...
வாழும் போதே!
ஏன்?
தோல்விகளுக்கு
தலை குனிகிறாய் நீ!
உலகைவெல்ல நீ தகுதி உள்ளவன் என்று
பிறக்கும் போதே பிம்பம் விழுந்திருக்கிறது.....
உழைப்பால் உயரப் பழகு
உள்ளங்கைகுள் உலகம்
வசப்படும்..
சி.செல்வகுமார்
வெள்ளலூர்-9360501589
படைப்புகளில் இவர்கள் வித்தியாசம்
என்பதால், ஊனத்திலும் இவர்கள்
சாதனையாளர்கள் என்பதால்
ஊனமும் ஒரு நல் அழகே.
பலவீனம் உடல் உறுப்புகளில்
ஆனால் பலமோ மனதில்
சிந்தை பலத்தால் ஜெயித்துக் காடுவதால்
ஊனம் ஒரு நல் அழகே!
கண் இல்லாமல் பார்க்கிறார்கள்
செவிப்பலம் இன்றிக் கேட்கிறார்கள்
பாஷை இல்லாமல் பேசுகிறார்கள்
பலம் இல்லாம்லேயே வாழ்கிறார்கள்.
கரங்கள் இன்றி படைக்கிறார்கள்
சிறகு இன்றி சிந்தையால் பறக்கிறார்கள்
கால்கள் இல்லாமல் நடக்கிறார்கள்
வாழ்வு இழந்தும் வாழ்கிறார்கள்
அசாதாரண வாழ்வு வாழ்வதால்
பிறர் சந்தோஷத்தில் தம் சந்தோஷத்தை
காண்பதால், குறையை நிறைவாய்
கொள்வதால் இவர்களும் அழகே.
இறை அருள் இருக்கும்வரை
நல்ல பெற்றோர் இருக்கும்வரை
அருமையான உறவுகள் இருக்கும்வரை
இனிய உடன்பிறப்புகள் இருக்கும்வரை
வழிநடத்தும் ஆசான்கள் உள்ளவரை
உயிர்தரும் நண்பர்கள் உள்ளவரை
வழிகாட்டும் வள்ளல்கள் உள்ளவரை
ஊனத்தை மதிக்கும் உள்ளங்கள் உள்ளவரை
ஊனம் ஒரு நல் அழகே!
உரிய உரிமைகளை தந்து
சமூகம் இவர்களை அங்கீகரித்தால்
ஊனமும் ஒரு நல் அழகே!
உற்றுப்பார்த்தால் ஒளிந்திருக்கும்
திறமைகள் திரியும் உயர்வு தந்து
பார்த்தால் ஊனத்தின் உன்னதம் புரியும்
ஊனமும் ஒரு நல் அழகே புரியும்.
-கவிதாயினி। சாந்தி ராபர்ட்ஸ்
உதகை.
மலர்கள்
அரும்புகளில் மட்டுமின்றி அந்திமக்காலம் வரை
அழகழகாய்த் தோன்றி அசத்தும் அபூர்வங்கள்.
கடவுச்சீட்டாக காதலர்க்குப் பயன்படினும்
கடவுளரின் பூசனைக்கும் கடன்பட்டவைகள்
வண்ணங்களாலும் வடிவங்களாலும் வழிமறந்து
வாண்டுகளை வசீகரிக்கும் வரவேற்பு வளைவுகள்
இனவிருத்திக்கு இடம்கொடுக்கும் இயல்பினினால்
இம்மியளவும் மனவருத்தமின்றி மறைபவைகள்
வாடிஉதிரும் வரை வாசம் வீசும் வழக்கத்தினை
வாடிக்கையாய் வைத்து வாழ்ந்து காட்டுபவைகள்
கவிஞர்களின் கற்பனைக்குக் கைகொடுப்பதோ
கடைகளிலும் விற்பனைக்கு வைக்கப்படுபவைகள்
மனிதர்களின் மரணத்துக்கு மெளனாஞ்சலி செலுத்த
மணிக்கணிக்கில் காத்திருக்கும் புனித ஆத்மாக்கள்
சுபகாரியங்களிலும் சுற்றாத்தார் போல் வந்து
சுற்றிச்சுழன்றபடி சுகராகம் பாடுபவைகள்
இறைவனுக்கும் புலவனுக்கும் இடையே வந்து
இலக்கண சர்ச்சைக்கு இலக்கானவைகள்
மென்மையிலே மெல்லியலார்க்கு உவமையானாலும்
மென்மேலும் மே(தி)னியை மேன்மைப்படுத்துபவைகள்.
கவிஞர்। கலைமதிராஜன்.
கோவை.
9842535675
தேடல்!
காலை முதல் மாலைவரை
பல வீடுகளில் வேலை செய்துவரும்
அம்மவின் மாதசம்பளத்தில்
அனைத்து செலவுகளையும் மீறி
சேரும் பணத்தை ஒளித்து வப்பாள்
சாமி படத்திற்கு பின்னால்!
''எளிதாய் எடுத்து குடிக்க வழியில்லாமல்
தேடி எடுக்க வைக்கிறாயே?'' என
கோபத்தில் அடிப்பார் அப்பா!
ஒரு நாளும் தேடியதில்லை
வேலையை மட்டும்!
கவிஞர்। கன்னிக்கோவில் இராஜா.
சென்னை.
9841236965
பசியை விரட்டும்
கடவுள்
உழவன்
சிறிய பெட்டிக்குள்
தூஙகும் அக்னி
தீக்குச்சி
ஆசை தோன்றி
மரணம் வந்தது
எய்ட்ஸ்
தொட்டி கட்டினேன்
மழை பொழியவில்லை
நீர் சேகரிப்பு
துலைத்து விட்டேன்
கண்டுபிடித்து தாருங்கள்
சந்தோஷம்
ஒவ்வொரு வீட்டிலும்
இறைவன் வாழ்கிறார்கள்
பெற்றோர்
மழை தந்த
அன்பளிப்பு
வெள்ள நிவாரணம்
அக்காவுக்காக
தங்கை மறைந்துக்கொண்டாள்
பெண்பார்க்கும் படலம்.
வீரர்கள் அழவில்லை
ரசிகர்கள் அழுதனர்
இந்தியா தோல்வி.
மெளனமாய் நின்றேன்
அழகாய் பாடியது
தேசிய கீதம்।
கவிஞர். திருசிற்றம்பலம் சுரேஷ்.
கடலூர்.
9944745781
உணர்ந்து கொள்ளாமல்.....
நித்தமும் ஆயிரத்தார் வலைகட்கு மீந்தந்து,
முத்துகளும் சிற்பிகளும் சங்குகளை யும்தந்து,
எத்திக்கும் எமைச்சேர்க்கும் அலையார்த்த ஆழியே...!
ஞாலத்தின் முதல் தோன்றி மூத்தக்குடி யென்றாகி - உய்யும்
சீலத்தில் மானத்தில் யாவர்க்கும் வழிகாட்டி,
காலத்தா லின்றைக்குக் கயவர்க்கு உயிரீனுங்
கோலத்தைக் கண்ணுற்றந் தாங்கிடுமோ தமிழுதிரம்!
''அடுத்தவர்க்கு முதலுணவு அடுத்துதான் நமக்குணவு'' - என்றே
எடுத்தோதல் மட்டுமன்று.... நடப்பியல் காட்டுமினம்,
அடுக்காகப் பல்லுயிரை எமனுக்கு உணவாக்கித்
துடிக்கின்ற செய்கையினைப் பார்த்தப்பின்னும் உறங்குவையோ?
ஈழத்தின் மண்ணதிலே இருப்பதெங்கள் இனமடா! - உயர்
வேழத்தின் சீற்றாத்தைக் கொண்டதெங்கள் மனம்டா!
ஆழமாய்த் துயர்கண்டும் அஞ்சாத திண்மடா! - என்றே
ஆழியே அலையுயர்த்து! அவர்மனத்தி லிதைநிறுத்து....
''நல்மனத்தை உற்றாவர்கள் பிறர்நலனைப் பேணுகின்றார்! - மற்றாய்
அல்மனத்தை உற்றவரோ அவர்நலனே பேணுகின்றார்!!
கல்மனத்தார் நாளுமெமைக் காக்கைபோற் சுடுகின்றார்...!
''வல்தமிழர் ஒருசேர்ந்தால் வடுக்கூட இருக்காது!!''
-கவிஞர்। கலைமணி. மா.ஜெ. சசிக்குமார்
எழு! எழு! தமிழா விடிவுண்டு - உன்
எதிரிக் கதனால் முடிவுண்டு - உன்
தொழுத ககளை தூக்கி நிறுத்து
பழுதெலாம் பறக்க சிறகுண்டு - முப்
படையும் போகும் சிதருண்டு!
உனக்குள் உறுதி முளைக்கட்டும் - அதனால்
உரிமைத் தமிழ்நிலம் கிளைக்கட்டும் - அன்றே
பகையும், இரண்டகம் பதுங்கி ஓடும்
மனத்தில் இன்பம் கலைக்கட்டும் - உன்
மானப் போரில் கதிரெட்டும்!
தன்னலம் அனைத்தும் விட்டுவிடு - வரும்
தடைகள் அனைத்தும் வெட்டிவிடு - நீ
உன்னலம் மறந்து உலக உயிரை
கண்ணின் இமையாய் காத்துவிடு - தோழா
இரண்டில் ஒன்றைப் பார்த்துவிடு!
துணிவே துணையாய் நினைத்துவிடு - பனித்
துளியாய் துயரை கதிரியிடு - நீ
குனிந்து கிடந்து குற்றம் செய்து
பணிந்து போவதை விட்டுவிடு - புரட்சி
பாதை தெரியுது தொட்டுவிடு!
கவிஞர். புதுவைத் தமிழ் நெஞ்சன்.
புதுச்சேரி.
எழு! எழு! தமிழா விடிவுண்டு - உன்
எதிரிக் கதனால் முடிவுண்டு - உன்
தொழுத ககளை தூக்கி நிறுத்து
பழுதெலாம் பறக்க சிறகுண்டு - முப்
படையும் போகும் சிதருண்டு!
உனக்குள் உறுதி முளைக்கட்டும் - அதனால்
உரிமைத் தமிழ்நிலம் கிளைக்கட்டும் - அன்றே
பகையும், இரண்டகம் பதுங்கி ஓடும்
மனத்தில் இன்பம் கலைக்கட்டும் - உன்
மானப் போரில் கதிரெட்டும்!
தன்னலம் அனைத்தும் விட்டுவிடு - வரும்
தடைகள் அனைத்தும் வெட்டிவிடு - நீ
உன்னலம் மறந்து உலக உயிரை
கண்ணின் இமையாய் காத்துவிடு - தோழா
இரண்டில் ஒன்றைப் பார்த்துவிடு!
துணிவே துணையாய் நினைத்துவிடு - பனித்
துளியாய் துயரை கதிரியிடு - நீ
குனிந்து கிடந்து குற்றம் செய்து
பணிந்து போவதை விட்டுவிடு - புரட்சி
பாதை தெரியுது தொட்டுவிடு!
கவிஞர். புதுவைத் தமிழ் நெஞ்சன்.
புதுச்சேரி.
மூளைதானம்
மூலதனம்.
ஆறுமுகனே!
பன்னிரு கைகள் வேண்டும்
வீட்டுப்பாடம்।
நின்று போனது
மழையின் வருகை
காடழிப்பு.
தாய்ப்பால் மறக்கடித்து
புட்டிப்பால்
அயல்மொழிக்கல்வி।
நீடிக்கிறது
உரிமைப்போர்
தீவின் தாகம்.
குடி
குடியைக் கெடுக்கும்
பெப்சி -கோலா
கள்ளிப்பால்
மறு
சாதிக்கும் பெண்பால்.
கவிதாயினி. கு.அ. தமிழ்மொழி.
புதுச்சேரி.
இவள் வியர்வையை விருந்துண்ண
காத்திருக்கும் கழுகுகள்
ஏராளம்.
இவள் வாழை இலை வடிவம்
கண்டு, எச்சில் இலையாய்
மாறிப்போனவள்.
இவளொ ஒருவன் கழுத்துக்கு
மாலையாகும் முன்பே
பலரின் உடலுக்கு
போர்வையாகி போனவள்.
இவள் ஒரு சமத்துவபுரஃம்.
இவள் முன் மதங்கள்
மண்டியிட, சாதிகள் சட்டையை
கழட்டிக்கொண்டன.
இவள் உடல் எனும்
காகிதத்தில் ஆண்களின் ஆசைகள்
அச்சுப்பிழைகளாய்.
இவள் இளமை விற்பனைக்கு
என்ற அறிவிப்பால், இவள்
படுக்கை அறயில் தினந்தோறும்
ஆண்களின் சுயம்வரம்.
இவளின் உள்ளத்தை சிதைத்து
உடலை ஊனமாக்கியவள்.ஆம்
இவள் சிறகினை விற்று
பறக்கக் கற்றுக் கொண்டவள்.
-கவிஞர். ரா. பிரேம் சுரேஷ். நீலகிரி.
9751127276
தனி அறை உறங்கலாமா?....
அங்கே! சவக்கிடங்குகளில்சாமரம்
வீசாமல் உலர்ந்து கொன்டிருக்கின்றன
உணர்வற்ற உடல்கள்....
உணர்வின்றி காப்பதால்
உயிரோடு இருக்கின்றான்
மதுகலந்த மதியோடு காவல்காரன்...
உடல் தந்துஉயிர் தரும்
மாதுக்கள்உயிர் விட்ட பின்னரும்
கீறி கிழிக்கப்படுகின்றனர்
இந்தப்பாவம் செய்த பாவிகளால்
உணர்வுகளால் அங்கங்கள்
அல்லோலப் படும் போது
ஏற்றுக்கொண்டு பெருமூச்சுவிட்ட
அவள்களின்உடல்கள்இன்று ஏனோ!
அறுக்கப்படும் போதுஅமைதியாக உறங்குகிறது....
மனித உடலின்சுவை கண்ட
உயிர்கள்அழுகை நடிப்பால்
ஆர்ப்பரித்து கொண்டுஇவர்களை
விட்டு எட்டி நிற்கின்றது....
உணர்வுகளை உமிழ முடியாமல்
மரத்துப்போய் தன் மரணத்தை
ஆராய்வதாய் எண்ணி தனியே!
உறங்குகின்றனர்...
அவர்களுக்கென உள்ள
தனி அறையில்....
பிண அறையில்
நிரந்தர உறக்கத்தோடு...
நாமும் உறங்கலாமா?
இவ்வுலகை விட்டு விட்டு
மனித உணர்வற்ற சடங்களின்
வாழ்வைவிட
இந்த உயிரற்ற சடலங்களொடுஉறங்கலாமா?
முகவை கவிஞர் இளகவி....
9894887705
வயல் எங்கும் கான்கிரீட்.....
சவக்குழியில் வீசப்படும் குழிமணலாய் வயல் பள்ளத்தை நிரப்பும் மணல்
வயலின் விழி நீராய் வழிந்தோடும் துளி நீரையும் விடாது மூடவரும்.
பொக்லைன் யானை கண்டு
பிலம்பி அழும் வயல் குழந்தை!
நெல் விளைந்த இடத்தில் செங்கல்
கலப்பை இடத்தில் கலவைச்சட்டிகள்
மாட்டு வண்டிப்பாதையில் மணல் லாரிகள்!
நாற்று வயல்களில் நடந்து முடிந்தன
நண்டுகளின் நடன ஓட்டம்!
தவளையை துரத்திய தண்ணி பாம்பு
கொத்திதின்ன வந்த கொக்கு கூட்டம்
மொத்தமாய் போனது முந்தாநாள் கட்டிட்த்தில்!
வரப்பை விரும்பி சீவும் சிமெண்ட்
கலவையை மனமின்றி
திரும்ப திரும்ப துலாவும்
ஈரமில்லா காங்கிரீட் சட்டை
இறக்கப்போகும் வயலுக்கு
அளவு டேப்போடு அலையும் புரோக்கர்கள்...
செத்தவயலின் மீது
செங்கல் கட்டிடமோ!
அடித்த வயலைப்பார்க்க
ஆசையுடன் உயர எழும்!!
- கவிஞர் தென்றல்.கோ.சண்முகசுந்தரம்
வெள்ளியங்காடு -9865942319
கவிமழலைகள்.....
அவசர உலகம்
அரைமணிநேரத்தில்
நினைத்த உடன் என்னால்
அழகான குழந்தை
பெற முடியும்...எப்படி?
மனிதங்களுக்கு மறைவு தேவை....
இரண்டுகள் இணையாமல்
இணையான மற்றொன்று....எப்படி?
தனிமையுடன் சுகம் கண்டு
தள்ளாடும் மழலை பெறலாம்
சக்கர உலகில் சாதித்திட
சாத்தியக்கூறு உண்டு.
ஓடும் பேருந்தில்
உட்காரும் இடத்தில்
நடைபயணத்திலும்
நாலுபேர் மத்தியிலும்
சூழ்ந்து நிற்கும் கூட்டத்தினூடே!
சூல் கொள்வதில்
வெட்கமே!இல்லை எனக்கு....
உணர்வுகளின்
மரபணுக்களை
உள்ளுக்குள் வாங்கி
இதயக்கருவரைக்குள்
இளஞ்சூடாய் நிரப்பி....
சிந்தனை வித்துக்களை
சிதறடிக்காமல்
பொத்தி பாதுகாத்து..
தனிமையில் பிரசவித்து
தத்தி...தத்தி
தவழ்ந்து
திக்கி திணறி
குட்டி குட்டி மழலைகள்
அழகழகாய்...
நான் ஈனுகின்ற குழந்தை
புணரும் போதும் இன்பம்
புலரும் போதும் இன்பம்.....
என் எதிரே!
கவிமழலைகள்
அழகாய்.....
- திருமதி.அ.ஸார்ஜான் பேகம்
விருதுநகர்
இயந்திர மனிதன் ....
மேஸ்திரி வேலைக்குத்தான் வந்தானோ!
சின்னப்பையன் சிமெண்ட் வாங்கித்தந்தானோ!
முந்தநாள் காலையில
முழுசா மணலுதான் :சிமெண்டேயில்ல
இன்னைக்காவது
ஒன்னுக்கு ஆறு
கலவ போட்டா பரவாயில்லை
சாயங்காலத்துக்குள்ளார ஆசாரி
சன்னல் சட்டம் கோப்பானோ! இல்ல
நாம வீடுபோய் சேர்ந்தபின்தான்
புது எழப்புளியே கேட்பானோ!
புதுவீடுகட்டும்
பொன்னுச்சாமி யோசிச்சான்
பொக்லைன் ஸ்டேரிங் புடிச்சபடி
ஆக்கிரமிப்பில் கட்டியிருந்த
ஒரு மாடிவீட்ட இடிச்சபடி....
- புதுவைபிரபா.
புதுச்சேரி
அக்காலமும் வருமோ.....
பள்ளி செல்லும் பாதையிலே! வெள்ளரிக்காய் முளைச்சிருக்க காட்டுக்காரன் கத்தல காதுல வாங்காம பறிச்சித்தின்ன காலமும் போயி.....
கரிசல்காட்டு
வெள்ளப்பருத்தியின் காயப்பரிச்சு -
பக்குவம உரிச்சு பாளம் பாளமாக பிரிச்சு-
நா இனிக்க ருசி பார்த்து
தின்ன காலமும் போயி...
விளைஞ்சி நிக்கும் கம்பங்காடு புகுந்து
கதிரப்புடுங்கி உள்ளங்கையில தேச்சி உதிர்த்து..
. உடம்புக்கு உரமாய் தின்னு
வளர்ந்த காலமும் போயி...
மொச்ச,அவரை,பாசிப்பயிறுன்னு
பலதரப்பட்ட விளைச்சல்கள...
பக்குவமா அம்மா அவிச்சித்தந்தத
அருமையா தின்ன காலமும் போயி...
சாக்லெட் மிட்டாய்னு வாய்க்கு கேடாகவும்
அய்ஸ்கிரீம் சாலட்னு உடலுக்கு கேடாகவும்
பான்பராக் பாஸ்ட்புட்டுனு வாழ்க்கைக்கு கேடாகவும்
வாழும் காலம் வந்து நம்மை வாட்டுதே!
- கவிஞர்அ.இளஞாயிறு
9443761307 9865076550
வேலிகள்....
விளையும் பயிர்களை
அடிக்கடி
விலங்குகள் அழித்தன...
வேலி ஒன்று வேண்டியிருந்தது அமைத்தோம் ஒரு வேலி
அருகில் யாரும்
அண்டாத படி...
வேலியின் முட்கள்
வேகமாய் வளர்ந்ததில்
பயிர்களும் கொஞ்சம்
பாதிக்கப்பட்டன...
வேலியை தாண்டின
சில வெள்ளாடுகள்
படர்ந்த வேலிக்கும்
பாதிப்பு வராத வரையில்
யாரும் தாண்டட்டும்
எங்கேயும் மேயட்டும்
எங்களுக்கு வேலிதான் முக்கியம்....
- கவிஞர் வடுவூர் சிவ.முரளி
புலிவலம்
98426859
கேள்வி கேட்கும் புத்தர்கள்..
கூட கோபுரம்-
அறைகள் நிறைய பணக்காகிதங்கள்
உடல் நிறைய தங்க,வைர,மோதிரங்கள்
போதாக்குறைக்கு கூட பட்டங்கள் பதவிகள்....
வீதிக்கு செல்லக்கூட
விலை உயர்ந்த ஏசிக்கார்கள்
வீதியில் வருவோரை குரைக்க
வெளிநாட்டு புதிய ரக நாய்கள்
ஏழைக்குத்தான் விலைவாசி உயர்வுகள்
சாவுன்னா என்ன?
கேள்வி கேட்கும் புத்தர்கள்....
ஜமீன் வாழ்க்கை-
அதிகார வேட்கை-
எதுவும் இருந்து
என்ன மனிதா?
பசியில் அழுகும் குழந்தைக்கு
"நூறுக்கு" பால் தர மறுக்கும் மானிடா!
கோடிகள் மீது புரண்டாலும்-
தெருக்கோடியில் நீ
இருந்தாலும்-
ஒரு நாள் ஒரு பொழுது
ஒரு நொடியில்
வழ்வில் மரணம் உறுதி...
கவிஞர்கவிபெரியசாமி
9943791390
வாழ்க்கை
தொடர்வண்டியாய் தொடங்கிய
என் வாழ்க்கை பயணம்
நிறுத்தத்தில் நின்று செல்லும்
பேருந்தாய் பயணித்தது
தடைகளை தகர்த்தெறிந்து
என் வாழ்க்கை பயணம்
எவரெஸ்ட் சிகரத்தில்
ஏணி வைத்து ஏறும் என் முயற்சி
என்றோ! ஒரு நாள் வெற்றிபெறும்...
கவிஞர் பா.ஜெயக்குமார்
9842639779
ரோஜா தோட்டம்
எழுதிவைக்கவெண்டும்
முட்கள் ஜாக்கிரதை.
பசியோடு செத்துப்போனான்
ஊர் கூடித்தூவியது
வாய்க்கரிசி...
வெட்டிச்சாய்க்கப்பட்ட
மரத்தினடியில்
செத்துக்கிட ந்தது நிழல்.
தாயின் பிணத்தருகே!
பாலுக்கு அழுகிறது
குண்டு வீச்சில் தப்பியகுழந்தை.
இருட்டு பெண்ணை
ரசித்து உருகுகிறது
எரிகின்ற மெழுகு.
- கவிஞர் வசந்தராஜா.
9486579791