ஆதியந்தமாய்....

நினைத்து உருகி
உன்னிலேதான் கரைகிறேன்
புரியாமல் நீயோ
என் தூரிகைத் தொடா

தொடுவானமாய்..!


அங்கிங்கெனாதபடி என்னுள்

ஆதியந்தமாய் நீ

விழிமூடியும் மனமுறங்காது

கசிகிறது ‍- உன்
வனப்பில்...!

கனந்தாங்காது

சுகமாய்
பிரசவிக்கிறேன்
தமிழே - உனை
ஓர் கவிதையாய்....!


- மதி (கற்பகஜோதி)

9715969189.

No comments: