ஆதியந்தமாய்....
நினைத்து உருகி
உன்னிலேதான் கரைகிறேன்
புரியாமல் நீயோ
என் தூரிகைத் தொடா
தொடுவானமாய்..!
அங்கிங்கெனாதபடி என்னுள்
ஆதியந்தமாய் நீ
விழிமூடியும் மனமுறங்காது
கசிகிறது - உன்
வனப்பில்...!
கனந்தாங்காது
சுகமாய் பிரசவிக்கிறேன்
தமிழே - உனை
ஓர் கவிதையாய்....!
- மதி (கற்பகஜோதி)
9715969189.
No comments:
Post a Comment