தூசுத் தட்டப்படாமல்
ஏக்கத்தோடு
நூலகத்தில் புத்தகங்கள்.
வானவீதியில்
கண்டன ஆர்பாட்டம்
கார்மேகம்.
கோடையில் வழிந்தோடும்
வற்றாத ஜீவநதி...
வியர்வை
ஒளிரும் மகிழ்வில்
ஆனந்தக் கண்ணீர்
எரியும் மெழுகுவர்த்தி.
காமனோடு
காலன் உருவாக்கிய கூட்டணி
எய்ட்ஸ்
தரிசாய் ஆவது
இவர்களின் வாழ்வும் தான்..
முதிர்கன்னி.
- ஈழக்கவிதாசன். மா. ஞானசூரி.
கோடிக்கால் பூதம்...
இலக்கு
இன்னும் வெகுதூரம்....
வெட்ட வெளி...
நெடும்பாலை...
காலை விட்டு
ஓடத்துடிக்கும்
செருப்பு...
செருப்புக்கும் காலுக்கும்
இடை புகுந்து
உறுத்தும்மணல்....
அவ்வப்போது வீசும்
மணற்காற்று...
ஆனாலும் பயணம்
தொடர்கிறது...
தடைகளை தகர்த்து
இலக்கை அடைந்தே
தீரும்
கோடிக்கால் பூதம்...
கவிஞர்அய்ந்திறன் (மு.இராஜராம்)
அருப்புக்கோட்டை
அலைபேசி எண்: 9443731165
இழப்புகள்......
நெடுஞ்சாலை விரிவாக்கத்தில்
இடிபடும் வீடுகளில்
என்வீடும் சிக்குண்டது -
அதிர்ஷ்டமா ? துரதிர்ஷ்டமா?
எனக்குத் தெரியவில்லை.
ஆனால்,
பாடப்புத்தகத்தில்
மயிலிறகைப் பாதுகாத்தபடி,
குட்டிகளுக்காகத் தவமிருக்கும்
என் செல்ல மகளுக்கு,
அந்த தினம் கருப்பு தினம்தான்.
ஆசைப்பூனை
சுருண்டுப் படுத்த மூலை,
சுவற்றுக்கிறுக்கல் சுவடுகள்,
ஒளிந்து விளையாடிய
கதவுகளின் மறைப்புகளென
கூடுதல் இழப்புகளை
சுமக்கும் அவளை
என்ன சொல்லித் தேற்று்வேன்.....?
ஏகலைவன்
சேலம்.
9944391668
Subscribe to:
Posts (Atom)