அன்னதானம் !
வீட்டுக் கூரையில்
அள்ளிப் போட்ட
ஒருபிடிச் சோறு

தன்னந்தனியே
தின்றதாய் இல்லை
வரலாறு
ஒட்டிய வயிற்றுக்கு
ஒருபிடி சோறு தேடும்
சிறுமியே ...
காக்கையிடம் போய்
கையேந்து !

- உழவன்
மின்னஞ்சல் : tamil.uzhavan@gmail.com

No comments: