சூரியத்துகள்...

நடந்து கொண்டே இருப்பேன்
நாட்கள் நகரும்போது
கால்கள் துவண்டாலும்
இலக்கை அடையும் வரை!...


இருட்டாய் இருந்தாலும்
வெளிச்சம் நோக்கி!
குளிராய் இருந்தாலும்
வெப்பம் நோக்கி!

சூரியனை நோக்கி
செல்லும் பயனத்தில்
விட்டிலாகி
வீழ்ந்துடுவேன் என்றாலும்
எரிந்து போனாலும்
சேர்ந்திடுவேன்
ஒரு சூரியத்துகளாய்....
கவிஞர்அருணாச்சலசிவா
சென்னை-9884398283

No comments: