பல மணிமேகலை.....


இறைவன் படைப்பிலே!வந்த மாற்றமோ!இடையில் வந்த விழி ரசாயனத்தால்வந்ததோ!
கடும் தவம் தான்பூண்டிருந்தனர்- ஏனைய
களைத்தனர்....
ஆனை பசியோ!
அடக்க முடியாததால்தேகத்தில் உணவிட்டு
உண்ணுகின்றனர்.....
எந்த முனிவனும் செய்யாத ஒரு மர்ம முடிச்சை
அவிழ்க்க முனையும் ஒரு அதிசய முனிவனாக வலம் வருகின்றனர்
சாலைத்தெருக்களில்.......

விழியை கழுவி யானைப்பசியை அடக்க பல மணிமேகலைகள் தெருக்களில்
சுயம்வரம் அடுப்புக்குள் தலையை
புதைத்துக்கொண்டுதான்
விறகு எரிக்க முனைகின்றனர்....
எதுவும் புரியாத பெற்றோரின்
மனதில் கிளிசரினை தடவி விட்டு
வாடிக்கையாக தான் தொடருகிறது...
மணி தெரியாமல்
திசைகாட்டும் கடிகாரங்கள்
அல்ல கலங்கரை விளக்குகளாய்
தன் முந்திக்கு படகுகளை வழியனுப்பும் ஓடம்....
நினைத்தால் நிலமை சரியாகிடும் என
நினைக்கும் அண்ணனுக்கு
நிம்மதை கெடுத்து பூபாள ராகத்தில் ஒரு
சோக வேதாந்தமாக அவளின் வாழ்க்கை
பிறருக்கு,....

கிட்டாத அட்சயப் பாத்திரத்துக்கு
அலை பாயும் பல மணிமேகலைகள்
என் கண்ணில்
நிறைகின்றன... தினமும்
பல புனையா ஓவியமாக முச்சந்தியில்...
கவிஞர் கோபிநாத்ராஜா
இராமநாதபுரம் -9894887705

No comments: