என்ன செய்யப் போகிறாய்?

ஏழுமலை
ஏழுகடல் தாண்டி
இருண்ட குகைக்குள்
இருந்த பேழையினுள்
ஒளித்து வைத்த
என் உயிர் எப்படி
சிக்கியது?
உருட்டி விளையாட
உன் கைகளில்

கொடுத்தற்கான அடையாளங்கள்
என்னிடம்
ஏதுமில்லை...


வாங்கியதற்கான
அடையாளங்களை
என்ன செய்யப் போகிறாய்?

கவிஞர்யாழி
9976350636

No comments: