நிம்மதியான நித்திலம் காண்பது எப்போது....


கழுபிணியும் தயமைத்தனமும்
அழுகுரலும் அவலநிலையும் மறைந்து
ஈழத்தமிழர் இனிய வாழ்வில்
ஈடில்லா மகிழ்ச்சி மலர்வது எப்போது
சுதந்திர மூச்சை சுவாசன் செய்ய
இயந்திரமாஇப் போராடிய
தூயத்தலைவரின் இதயத்தாசை
துடிப்புடன் நிறைவேறியது -இன்றோ
யிரம் கேள்விகள் அம்பாய் துளைக்க
அடுத்தது என்ன? நடக்குமோவென
அச்சமுறும் துச்ச நிலை;
நிலையான நிம்மதிக்காக
நித்தமும் நிலைகுலையும்
நிலையில் -
தேவையில்லாமல்
தொலைக்காட்சித் தொடரில் வாழ்வைத்
தொலைக்காமல்......
தொகைக்காக -
பகை உணர்வுமிக்க வெளிநாடு செல்லாமல்
தகைமைசால் உணர்வோடும்
தளராத நெஞ்சத்துறுதியோடும்
துளிர்விடும் போதே தளிர்களின் மனதில்
தொண்டுள்ளத்தை வளர்க்க வேண்டும்....
பணம் சம்பாதிக்க பாதகச் செயல்களுடன்
பிணம் தின்னிக் கழுகுகளாய்
மக்களாஇ பிடிங்கி த்தின்னும் பிசாசுகள் ஒருபுற்ம்
ஒடுங்கியே போனது ஒழுக்க நிம்மதியும்
ஒரு கணம் உலக நிலை நினைத்தால்
பூரணமான புது உலகினை
வரும் புத்தாண்டில்லாவது பூரிப்புடன்
நாம் காண்போமா?

கவிதாயினிகலைத்தாமரை-மதுரை

No comments: