கிளிகளிடம்
உன் எதிர்காலத்தை கேட்பதை கைவிடு
அதன் வாழ்க்கையே நெல்லுக்கு
சிறைப்பட்டுக் கிடக்கிறது...
கிழக்கே வெளுக்கும் முன்னே!
நீ விழித்தெழ உன்
கண் ஒளிட்டே!
இந்த உலகம் விடியட்டும்
ஆறுவழிப்பாதையில் முதல் பாதை
நடைபாதை அதில் நம்பிக்கை நடைபோடு
வான்வழிப்பதையில்
உலகை வலம் வரலாம்....
உன் வருகைக்கு காத்திருக்கிறது
நட்சத்திரக்கூட்டம்.....
நீ எப்படி பிடித்தாலும்
மேல் நோக்கியே எறியும் நெருப்பு
இறக்கும் தருவாயில் கூட
நிமிர்ந்தே நிற்கும் தீ...
வாழும் போதே!
ஏன்?
தோல்விகளுக்கு
தலை குனிகிறாய் நீ!
உலகைவெல்ல நீ தகுதி உள்ளவன் என்று
பிறக்கும் போதே பிம்பம் விழுந்திருக்கிறது.....
உழைப்பால் உயரப் பழகு
உள்ளங்கைகுள் உலகம்
வசப்படும்..
சி.செல்வகுமார்
வெள்ளலூர்-9360501589
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment