எனக்கு முன்னால்


எனக்கு பின்னால்
என்னவாகி இருந்தேன் நான்?
அறியத் துடிக்கிறது தான்
மனசு !


பிரமாண்ட வெளியுள் நுழைந்து
துழாவி
ஊடுறுவிய முன்னும் பின்னும்
அகப்படாமல்
அவஸ்தையுடன் வெளியேறியது
ஞானம்॥!


எனக்கு பின்னால்
என்னவாகி இருந்தால் என்ன?
எனக்கு முன்னால்
என்னைத் துளைக்கும் பசிக்கு
எனக்கு சொல்வேன்
இப்போது....?

கா.அமீர்ஜான்-திருநின்றவூர்

No comments: