கசப்பான செய்தி
அம்மாவிற்கு
சர்க்கரை வியாதி.
மலர் வளையங்கள்
குவிந்தன
பூக்கடைகாரனின் சமாதியில்.
குளிர்சாதன அறைகள்
போக்குமா
மனப்புழுக்கங்களை...?
மின்வெட்டு
இலாபம் ஈட்டித்தந்தது
மெழுகுவர்த்தி கடைகாரருக்கு.
மூன்றெழுத்தில்
ஒரு உயிர்ப்பான கவிதை
காதல்...
- "நீல நிலா"கவிஞர்.செண்பகராஜன்
விருது நகர்.
No comments:
Post a Comment