கசப்பான செய்தி

அம்மாவிற்கு

சர்க்கரை வியாதி.



மலர் வளையங்கள்

குவிந்தன‌

பூக்கடைகாரனின் ச‌மாதியில்.


குளிர்சாதன அறைகள்

போக்குமா

மனப்புழுக்கங்களை...?


மின்வெட்டு

இலாபம் ஈட்டித்தந்தது

மெழுகுவர்த்தி கடைகாரருக்கு.


மூன்றெழுத்தில்

ஒரு உயிர்ப்பான கவிதை

காதல்...

- "நீல நிலா"கவிஞர்.செண்பகராஜன்

விருது நகர்.

No comments: