தேடல்!

காலை முதல் மாலைவரை
பல வீடுகளில் வேலை செய்துவரும்

அம்மவின் மாதசம்பளத்தில்

அனைத்து செலவுகளையும் மீறி

சேரும் பணத்தை ஒளித்து வப்பாள்

சாமி படத்திற்கு பின்னால்!

''எளிதாய் எடுத்து குடிக்க வழியில்லாமல்

தேடி எடுக்க வைக்கிறாயே?'' என‌

கோபத்தில் அடிப்பார் அப்பா!


ஒரு நாளும் தேடியதில்லை

வேலையை மட்டும்!


கவிஞர்। கன்னிக்கோவில் இராஜா.
சென்னை.
9841236965

No comments: