கேள்வி கேட்கும் புத்தர்கள்..

மாட மாளிகை -
கூட கோபுரம்-

அறைகள் நிறைய பணக்காகிதங்கள்

உடல் நிறைய தங்க,வைர,மோதிரங்கள்
போதாக்குறைக்கு கூட பட்டங்கள் பதவிகள்....


வீதிக்கு செல்லக்கூட
விலை உயர்ந்த ஏசிக்கார்கள்
வீதியில் வருவோரை குரைக்க‌
வெளிநாட்டு புதிய ரக நாய்கள்

ஏழைக்குத்தான் விலைவாசி உயர்வுகள்

சாவுன்னா என்ன?
கேள்வி கேட்கும் புத்தர்கள்
....

ஜமீன் வாழ்க்கை-
அதிகார வேட்கை-

துவும் இருந்து
என்ன மனிதா?

பசியில் அழுகும் குழந்தைக்கு

"நூறுக்கு" பால் தர மறுக்கும் மானிடா!


கோடிகள் மீது
புரண்டாலும்-
தெருக்கோடியில் நீ

இருந்தாலும்-
ஒரு நாள் ஒரு பொழுது

ஒரு நொடியில்

வழ்வில் மரணம் உறுதி...


கவிஞர்கவிபெரியசாமி
9943791390

No comments: