நிலவு....!
வெள்ளைத்
தாமரையில்
பவனிவரும்
பவளக் கொடி...!
மலைமுகடுகளில்
மறைந்துவரும்
தேவலோக
தேவதை...!
கருங்கடலில்
மஞ்சள் நீராடும்
இளநங்கையரின்
புதுமைத் தோழி...!
வெள்ளைநிற
முக்காட்டில்
வேடிக்கைக் காட்டும்
மாயபிம்பம்.....!
-கவிஞர்।பொன்.முரு.காமராசன்.
திண்டுக்கல். 9952356301.
No comments:
Post a Comment