அங்கே! சவக்கிடங்குகளில்சாமரம்
வீசாமல் உலர்ந்து கொன்டிருக்கின்றன
உணர்வற்ற உடல்கள்....
உணர்வின்றி காப்பதால்
உயிரோடு இருக்கின்றான்
மதுகலந்த மதியோடு காவல்காரன்...
உடல் தந்துஉயிர் தரும்
மாதுக்கள்உயிர் விட்ட பின்னரும்
கீறி கிழிக்கப்படுகின்றனர்
இந்தப்பாவம் செய்த பாவிகளால்
உணர்வுகளால் அங்கங்கள்
அல்லோலப் படும் போது
ஏற்றுக்கொண்டு பெருமூச்சுவிட்ட
அவள்களின்உடல்கள்இன்று ஏனோ!
அறுக்கப்படும் போதுஅமைதியாக உறங்குகிறது....
மனித உடலின்சுவை கண்ட
உயிர்கள்அழுகை நடிப்பால்
ஆர்ப்பரித்து கொண்டுஇவர்களை
விட்டு எட்டி நிற்கின்றது....
உணர்வுகளை உமிழ முடியாமல்
மரத்துப்போய் தன் மரணத்தை
ஆராய்வதாய் எண்ணி தனியே!
உறங்குகின்றனர்...
அவர்களுக்கென உள்ள
தனி அறையில்....
பிண அறையில்
நிரந்தர உறக்கத்தோடு...
நாமும் உறங்கலாமா?
இவ்வுலகை விட்டு விட்டு
மனித உணர்வற்ற சடங்களின்
வாழ்வைவிட
இந்த உயிரற்ற சடலங்களொடுஉறங்கலாமா?
முகவை கவிஞர் இளகவி....
9894887705
No comments:
Post a Comment