காரல் மார்க்சின்
மூளைதானம்
மூலதனம்.
ஆறுமுகனே!
பன்னிரு கைகள் வேண்டும்
வீட்டுப்பாடம்।
நின்று போனது
மழையின் வருகை
காடழிப்பு.
தாய்ப்பால் மறக்கடித்து
புட்டிப்பால்
அயல்மொழிக்கல்வி।
நீடிக்கிறது
உரிமைப்போர்
தீவின் தாகம்.
குடி
குடியைக் கெடுக்கும்
பெப்சி -கோலா
கள்ளிப்பால்
மறு
சாதிக்கும் பெண்பால்.
கவிதாயினி. கு.அ. தமிழ்மொழி.
புதுச்சேரி.
No comments:
Post a Comment