காரல் மார்க்சின்
மூளைதானம்
மூலதனம்.


ஆறுமுகனே!

பன்னிரு கைகள் வேண்டும்
வீட்டுப்பாடம்।

நின்று போனது
மழையின் வருகை

காடழிப்பு.


தாய்ப்பால் மறக்கடித்து

புட்டிப்பால்

அயல்மொழிக்கல்வி।

நீடிக்கிறது
உரிமைப்போர்

தீவின் தாகம்.


குடி

குடியைக் கெடுக்கும்
பெப்சி ‍-‍கோலா

கள்ளிப்பால்
மறு
சாதிக்கும் பெண்பால்.

கவிதாயினி. கு.அ. தமிழ்மொழி.
புதுச்சேரி.

No comments: