ரோஜா தோட்டம்

எழுதிவைக்கவெண்டும்

முட்கள் ஜாக்கிரதை.


பசியோடு செத்துப்போனான்

ஊர் கூடித்தூவியது

வாய்க்கரிசி...


வெட்டிச்சாய்க்கப்பட்ட‌

மரத்தினடியில்

செத்துக்கிட ந்தது நிழல்.


தாயின் பிணத்தருகே!

பாலுக்கு அழுகிறது

குண்டு வீச்சில் தப்பியகுழந்தை.


இருட்டு பெண்ணை

ரசித்து உருகுகிறது

எரிகின்ற மெழுகு.

- கவிஞர் வசந்தராஜா.

9486579791

No comments: