ரோஜா தோட்டம்
எழுதிவைக்கவெண்டும்
முட்கள் ஜாக்கிரதை.
பசியோடு செத்துப்போனான்
ஊர் கூடித்தூவியது
வாய்க்கரிசி...
வெட்டிச்சாய்க்கப்பட்ட
மரத்தினடியில்
செத்துக்கிட ந்தது நிழல்.
தாயின் பிணத்தருகே!
பாலுக்கு அழுகிறது
குண்டு வீச்சில் தப்பியகுழந்தை.
இருட்டு பெண்ணை
ரசித்து உருகுகிறது
எரிகின்ற மெழுகு.
- கவிஞர் வசந்தராஜா.
9486579791
No comments:
Post a Comment